Welcome To weekly News Paper Delta
100 ஆண்டுகள் பழமையான முத்து பல்லக்கு திருவிழா
24 Views

தஞ்சாவூர் :600 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் முத்து பல்லாக்கு திருவிழா. நள்ளிரவு பத்திற்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து சுவாமி விதவிதமான அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளில் எழுந்தருளி இராஜ வீதிகளில் பவனி. தஞ்சாவூர் மாநகரில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருஞான சம்பந்தர் குரு பூஜை முன்னிட்டு முத்து பல்லாக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல் இந்தாண்டு முத்துபல்லாக்கு திருவிழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு ஆலயத்தில் இருந்து விநாயகர் மற்றும் முருகன் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நள்ளிரவில் எழுந்தருளி விடிய விடிய இராஜ வீதிகளில் ஒன்றாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சிளித்தனர். மின்னொளியில் விதவிதமாக பவனி வந்த பல்லாக்குகளை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

.