Welcome To weekly News Paper Delta
சங்கீத அனுமார் சிறப்பு அலங்காரம் தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நுழைவாயில் வடபுறம் உள்ள தேரடி மண்டபத்தில் உள்ள புகழ்பெற்ற சங்கீத அனுமாருக்கு இன்று 27ம்தேதி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்றைய தினம் இரவு வீணை கச்சேரி நடைபெற்றது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள மூலவரை புற்று மண்ணால் உருவாக்கிய சதாசிவ பிரம்மேந்திரர் இத்தலத்தில் உள்ள சங்கீத அனுமாரை பிரதிஷ்டை செய்தார். புன்னைநல்லூர் மாரியம்மனை தரிசனம் செய்யும் பக்தர்கள் இங்குள்ள சங்கீத அனுமாரை தரிசனம் செய்தால் இரட்டிப்பு நற்பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். இத்தலத்தில் வருகின்ற 30ம்தேதி திங்கட்கிழமை அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
88 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நுழைவாயில் வடபுறம் உள்ள தேரடி மண்டபத்தில் உள்ள புகழ்பெற்ற சங்கீத அனுமாருக்கு இன்று 27ம்தேதி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்றைய தினம் இரவு வீணை கச்சேரி நடைபெற்றது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள மூலவரை புற்று மண்ணால் உருவாக்கிய சதாசிவ பிரம்மேந்திரர் இத்தலத்தில் உள்ள சங்கீத அனுமாரை பிரதிஷ்டை செய்தார். புன்னைநல்லூர் மாரியம்மனை தரிசனம் செய்யும் பக்தர்கள் இங்குள்ள சங்கீத அனுமாரை தரிசனம் செய்தால் இரட்டிப்பு நற்பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். இத்தலத்தில் வருகின்ற 30ம்தேதி திங்கட்கிழமை அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

.