தஞ்சை சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம்
தஞ்சாவூர் வடக்குவீதி இராஜ கோபால சுவாமி கோயிலில் இன்று 15ம்தேதி வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பார்வதி தேவி கங்கை தேவி சமேத ஶ்ரீ சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. மனித உருவில் சிவபெருமான் இத்தலத்தில் சிவேந்திரராக காட்சி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்