கார்த்திகை 4வது சோமவாரம் 1008 சங்காபிஷேகம்
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று 9ம்தேதி கார்த்திகை 4வது சோமவாரத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. 1008 சங்குகள் பஞ்ச லிங்கங்களாக பாவித்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பஞ்ச லிங்க வடிவில் இருந்த சங்குகளை காண கண் கோடி வேண்டும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.