பெரிய கோயிலில் கார்த்திகை சோமவாரம் 1008 சங்காபிஷேகம்
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் கார்த்திகை மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு மூலவர் பெருவுடையார் உனக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை சோம வாரங்களில் 1008 சங்குகள் பல்வேறு அலங்காரத்தில் வைத்து பூஜைகள் நடப்பது வழக்கத்தில் உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருவுடையாரை தரிசனம் செய்தார்கள்.